அப்பா

நான்காண்டுகளுக்குப் பின்
ஊர் திரும்புகிறேன்
கைநிறைய சம்பாதித்துக் கொண்டு !
உறவினர் சந்திப்பு
கொண்டு வந்த பொருட்களை
பகிர்ந்தளித்தேன் !
திருப்தியும் அதிருப்தியும்
மாறி மாறி விடைகளாய் !
சிலருக்கு பொருட்களாலும்
சிலருக்கு வார்த்தைகளாலும்
சமாதானம் !
அனைவரையும் அனுப்பிய பின்
மனைவியின் பக்கம் திரும்பினேன் !
விழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய !
அவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்
முகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் !
என் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்
எங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் !
என் மனைவி "அப்பாடீ ! அப்பாகிட்ட போடீ!" என்று
என்னையே என் மகளிடம்
அறிமுகம் செய்யும் ஒவ்வொருமுறையும் !

2 comments:

patnam rajesh said...

very good...

cheena (சீனா) said...

அன்பின் காதல் கவி

துணைவியைப் பிரிந்து அயலகம் செல்லும் நண்பர்கள் தாயகம் திரும்பும் போது ஏற்படும் பெரிய வலி இதுதான். என்ன செய்வது ... சரியாய் விடும் - காலம் மாறும்.

நல்வாழ்த்துக்ள் காதல் கவி

அப்பா

Posted on Monday, May 4, 2009 - 2 comments -

நான்காண்டுகளுக்குப் பின்
ஊர் திரும்புகிறேன்
கைநிறைய சம்பாதித்துக் கொண்டு !
உறவினர் சந்திப்பு
கொண்டு வந்த பொருட்களை
பகிர்ந்தளித்தேன் !
திருப்தியும் அதிருப்தியும்
மாறி மாறி விடைகளாய் !
சிலருக்கு பொருட்களாலும்
சிலருக்கு வார்த்தைகளாலும்
சமாதானம் !
அனைவரையும் அனுப்பிய பின்
மனைவியின் பக்கம் திரும்பினேன் !
விழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய !
அவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்
முகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் !
என் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்
எங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் !
என் மனைவி "அப்பாடீ ! அப்பாகிட்ட போடீ!" என்று
என்னையே என் மகளிடம்
அறிமுகம் செய்யும் ஒவ்வொருமுறையும் !

There has been 2 Responses to 'அப்பா' so far

  1. cheena (சீனா) says:

    அன்பின் காதல் கவி

    துணைவியைப் பிரிந்து அயலகம் செல்லும் நண்பர்கள் தாயகம் திரும்பும் போது ஏற்படும் பெரிய வலி இதுதான். என்ன செய்வது ... சரியாய் விடும் - காலம் மாறும்.

    நல்வாழ்த்துக்ள் காதல் கவி