ஹைக்கூ-28




சிவப்பு விளக்கு
எரிந்தும் நிற்கவில்லை
காற்று


*********

ஹைக்கூ (27)




தானே மோதி
தீவைக்கும் தலையில்
தீக்குச்சி



*********

ஹைக்கூ(26)




துகிலுரிந்த துச்சாதனின்
கண்களில் கண்ணீர்
வெங்காயம்



*******

ஹைக்கூ(25)



மென்மையில்லை
பூக்களைக் கையாண்டும்
பூக்காரியின் விரல்கள்





****

காத்திருப்பேன்....



காத்திருப்பேன்
என
கண்ணீருருடன்
கையழுத்திச்
சென்றாய்
என்னைப்
பிரிந்த
நம் கடைசி
சந்திப்பில்!

அப்போது எனக்குத்
தெரியவில்லை
நீ சொன்னது
உன் பெற்றோரின்
சொல்படி
உன் மனம்
மாறும் வரை
தான் என்றும்
உன் திருமணம்
நிச்சயம் ஆகும்
வரை தான்
என்றும்

என்ன செய்ய
சில நேரங்களில்
சில கேள்விகளுக்கும்
பதில்களுக்கும்
அர்த்தங்கள்
வேறாகவே
இருக்கிறது
அது நிகழும்
வரை !
******************

பிரிவு



(தலைப்பு அனுப்பியவர் அஸ்வினி அவர்கள்)
நீ எதற்காக
என்னை
பிரிந்தாய்
பிரிவு காதலை
அதிகமாக்கும்
என்கிறார்களே
அதற்காகவா ?
இல்லை
ஊடலும்
ஒரு வகைக்
காதலே
என்கிறார்களே
அதற்காகவா ?
அல்லது
நான் உனக்காக
எவ்வளவு
வருந்துகிறேன்
என தெரிந்து
கொள்வதற்ககாகவா?
எதுவாக
இருந்தாலும்
பின்பு தெரிந்து
கொள்வோம்

நீ !என்னுடனே
இருந்து விடு.


*************

வால் விண்மீன் !

(குட்டிப் பாப்பா அமித்துவுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்..24நவம்பர் 2009 )

விழித்ததும்
முகம் கழுவி
விழியோரம்
மையெழுதி
அமாவாசை
நிலவைப் போல
கன்னத்தில்
பொட்டிட்டு
கடைத்தெருவிற்கு
அழைத்துச் சென்று
கைநீட்டும்
பொருள்
கொடுத்து
வீட்டிற்கு
திரும்பி வந்து
விளையாடி
வா என்று
கீழிறக்கி
விட்ட பின்னால்

விளையாடி....
நீ
திரும்புகையில்
பின்னிரவில்
உலா வரும்
வால் விண்மீன்
அதுபோல
வால் நீட்டி
புன்னகைக்கும்
நான் வைத்த
திருஷ்டிப்
பொட்டு!

தந்தை!


சொந்தக்காலில்
நிற்க விரும்பி
சுயமாக
தொழில்கள்
தொடங்கி

தொடர்ந்து
அதில்
தோல்வி
கண்டு
மனைவிக்கு
மகிழ்ச்சி
மறுத்து

தனக்கான
தேவையாவும்
தகடளவு
குறைத்துக்
கொண்டு
பிள்ளைகளை
பள்ளிக்கனுப்பி

தடுமாறி
வாழ்வியக்கி
பிள்ளைகளை
ஆளாக்கி

தளர்ந்திடும் வயது
வந்தும்
தனக்கொரு
வெற்றி வாரா
காரணம்
என்னவென
தேடியும்
கிடைக்காமல்
களைத்திருக்கும்
தகப்பனிடம்

பிள்ளைகள்
கேட்கவென
அடுத்தடுத்து
காத்திருக்கும்

வரிசையாய்
கேள்விகள்
‘என்ன செய்தாய்
நீ எனக்கு ?
ஏனில்லை
சொத்தெனக்கு ?

நாகரீகம் ?




ஸ்டைலென்று
எண்ணி
புகைப்பிடித்துப்
பழகும்

அரைகுறை
ஆடை
அணிந்து
அளவில்லா
பெருமை
கொள்ளும்

விருந்து மற்றும்
விஷேசங்ளில்
மரியாதைக்காய்
மது பருகும்

அழகது
குறையும் என
தாய்மை அதை
தவிர்த்தோடும்

தவிர்க்க இயலா
தாய்மை கண்டால்
தாய்ப்பால் தர
மறுக்கும்

வேலை வேலை
என்றலைந்து
பிள்ளைகளை
காப்பகம்
இடும்

வீண் செலவு
என்றறிந்தும்
வாசலுக்கும்
வாகனம்
கேட்கும்

கூடி விட்ட
எடை குறைக்க
குறுக்கு வழி
மருந்து தேடும்

எதைப் பெற்றோம்
எதையிழந்தோம் என
இறுதியில் மதி குழம்பி

இயன்றவரை
இயல்பைத்
தொலைக்கும்
இன்றைய
மற்றும்
இனிவரும்
நாகரீகம் !

உயிர்த் தோழியின் திருமணம்


விழியசைத்து
நீ விடைபெற்ற
தருணத்தில்
வழிந்தோடும்
உன்னுடைய
விழி நீராலும்
சேர்ந்தோடும்
என்னுடைய
விழி நீராலும்
கர்வப்படும்
நம் நட்பின்
புனிதம்!

நட்பு-ரத்து


இன்று உனது
திருமண நாள்
இதுவே நம் நட்பின்
கடைசி நாளாகவும்
இருக்கலாம்
என்னிடம்
நீ உன்
திருமண
அழைப்பிதழ்
கொடுத்த
நாளிலிருந்து
என்னை
தயார்படுத்திக்
கொள்ள
ஆரம்பித்த நான்
இன்று
முழுவதுமாய்
தயாராகியிருந்தேன்
உணர்ச்சியற்ற
ஜடமாய்

இனி உனக்கான
நட்பு எல்லைகள்
வகுக்கப்படலாம்

என்னுடனான
உன்
மணிநேர
பேச்சுக்கள்
யாவும் நொடி
நேரமாய்
சுருக்கப்படலாம்
அல்லது
இல்லாமலும்
போகலாம்

என் மீது
உன் பார்வைகள்
வீழக் கூட
உன் விழிகளுக்கு
அனுமதிகள்
மறுக்கப்படலாம்.

நடக்கப்போவது
எதுவானாலும்
என்ன செய்ய
முடியும்
என்னால்!
நட்பெனில்
விட்டுக்
கொடுப்பதென்று
என்னை நானே
சமாதானம் செய்து
கொள்வதை தவிர!

தலைமுறைகளின் தலைவிதி


தலைமுறைகள்
பல தாண்டினாலும்
தாமதமாகவே புரிந்து
கொள்ளப்படும்
அன்னையின் பாசமும்
தகப்பனின் தியாகமும்


வட நாட்டில்
பிறந்த ரோஜா
ஒன்று உன்
அழகைப் பற்றிய
செய்தியறிந்து
தற்கொலை
செய்து கொண்டதாம்.
அடுத்த பிறவியலேனும்
தமிழ்நாட்டில் பிறந்து
உன் கூந்தல் சேர
வேண்டும் என்ற
கோரிக்கையுடன்.!

என்று தணியும் இந்த வறுமையின் சோகம்

தொடர்வண்டி
பயணங்களின்
வழி நெடுகில்
கர்வமேற்றும்
வளரச்சிகள்
யாவையும்
கருணையில்லாமல்
உடைத்தெறியும்
கையேந்தி நின்று
கெஞ்சும்
சின்னஞ்சிறு
சிறுமியின்
சின்னஞ்சிறு
பார்வை !

கண்ணிமைக்காமல்

அவள் ஆசையுடன் சமைத்ததை
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!

சக பிரயாணி ! ஆயினும் ............



மற்ற சராசரி பயணிகளைப்
போல அல்ல நீ !
அறிமுகத்திலேயெ சட்டென்று
நட்புக்கரம் நீட்டினாய்!
நட்பு எப்பொழுதும்
சுலபமானதாகவே இருக்கிறது
உனக்கு கை
வந்ததைப் போல!
ஏனோ சிலருக்கு அது
மிகவும் தொலைவாகவே
இருக்கிறது
அருகில் அமர்ந்தாலும்!
கரைத்தாய் நீ!
என் பயணத்தின்
சில மணித்துளிகளை
உன் உரையாடலாலும்,
மீதி மணித்துளிகளை
உன்னைப் பற்றிய கணிப்புகளாலும் !
நம்முடைய பயணம் முடிந்து
பல நாட்கள் கழிந்த பின்னும்
என்னுடனான உன் நட்பைத்
தொடர்கிறாய் இன்று வரை
அன்றைய என் எல்லா
கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி !
என்னுடைய இன்றைய
பயணங்களின் போது நினைவிலும்
நேரில் சந்திக்கும்போது
நிஜத்திலும்
பிரியத்துடனே
தரிசனம் தருகிறாய்
பெயருக்கு ஏற்றார் போல்!

ஹைக்கூ

மாமியாரும் மருமகளும்
பக்கம் பக்கம் உட்கார்ந்தபின்
ஆரம்பமானது சண்டை
தொலைக்காட்சி தொடரில் !

அப்பா

நான்காண்டுகளுக்குப் பின்
ஊர் திரும்புகிறேன்
கைநிறைய சம்பாதித்துக் கொண்டு !
உறவினர் சந்திப்பு
கொண்டு வந்த பொருட்களை
பகிர்ந்தளித்தேன் !
திருப்தியும் அதிருப்தியும்
மாறி மாறி விடைகளாய் !
சிலருக்கு பொருட்களாலும்
சிலருக்கு வார்த்தைகளாலும்
சமாதானம் !
அனைவரையும் அனுப்பிய பின்
மனைவியின் பக்கம் திரும்பினேன் !
விழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய !
அவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்
முகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் !
என் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்
எங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் !
என் மனைவி "அப்பாடீ ! அப்பாகிட்ட போடீ!" என்று
என்னையே என் மகளிடம்
அறிமுகம் செய்யும் ஒவ்வொருமுறையும் !

முதல் சந்திப்பு !

(திருப்பூர் தோழி ஜாக்லின் அமலாவின் வேண்டுகோளுக்காக )அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்
என் இரவைக் கெடுத்தன
நடுநிசி வரை நீண்டன தினமும்
என் தூக்கமில்லா இரவுகள் !
என் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்
என்னையும் என்னைச்சுற்றியும்
அழகுபடுத்த முனைந்தேன் !
என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
உன்னுடன் சேர்த்து எனக்கு
காதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் !
அதே நாள் தான் என் வயதையும்
எனக்குச் சொல்லியது !
வானொலியில் வரும் பாடல்கள்
எனக்காக எழுதப்படுவதாக உணர்ந்ததும்
உலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் !
அன்று நாம் பேசிய வார்த்தைகளும்
பார்த்த பார்வைகளும்
இன்று வரை ஓடிக்கொண்டேயிருக்கிறது
என் நினைவுத்திரையில்
பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
முடிவுறாமல் !

தென்றல் !

(திருப்பூர் தோழி ப்ரீத்தியின் வேண்டுகோளுக்காக )

வழியில் சந்திக்கும்
அனைவரையும் முத்தமிட
அனுமதி
தென்றலுக்கு மட்டும் !

தெரிகிறாய் !

தேவதைகள் ஆயிரம் சாலையில்
யாரையும் கவனிப்பதில்லை நான்
கவனித்தாலும் தெரிகிறாய் நீ
அவர்களின் ஏதோ ஒன்றில் !

என் நிலை!
நீ என்னைப் பார்க்கும்போது
என்னுள் நிகழ்கிறது ஜல்லிகட்டு !
முடிவில்
சாந்தமாய் நான்
உன் பின்னால் !

நாட்குறிப்பு ?


நீ தினமும் என்ன உடை அணிகிறாய் !
எங்கெங்கெல்லாம் செல்கிறாய் !
யார் யாரெல்லாம் உன் நண்பர்கள் !
யார் யாரெல்லாம் உன் எதிரிகள் !
எந்தெந்த பூக்கள் பிடிக்கும் !
இன்னும் என்னவெல்லாம் உனக்கு பிடிக்கும் என...
உன்னைப் பற்றிய
குறிப்புகளால் நிறைகிறது
என்னுடைய நாட்குறிப்பு !

தோற்றது போ !

வில் போன்ற புருவங்கள்
இருபுறமும் உருளும் கோலி விழிகள்
கண்களை பற்றிக்கொள்ளும் நிறம்
கேட்டுக்கொண்டேயிருக்கச்சொல்லும் குரல்
அத்தனையையும் கவனித்துக்கொண்டிருக்கையில்
சட்டென்று சிரித்தாய் நீ
மொத்தத்தையும் தோற்கடித்தது உன்
கன்னக்குழி !



ஹைக்கூ

பேருந்து ஜன்னலோரம்
அவஸ்தையானது
மழை நாளில்!

என் தோழி !

(கோயமுத்தூர் தோழிக்காக திருமண வாழ்த்துக்களுடன் )
எனக்கொரு தோழி கண்டேன் !
தினத்துக்கும் துணையென !
வாழ்விற்கு அர்த்தம் தேடி அலைபவர் யாவருமே
நட்பொன்று கொண்டிருந்தால் வாழ்வு அது இனிமை !

என் தோழியும் அப்படித்தான்
என் தேடல் வழி வந்தாள்!

நான் தேடாப் பொருளாய் வந்து
என் வாழ்வில் இனிமை தந்தாள் !

நட்பு எனும் மூன்றெழுத்தை
முடிவிலியாக்க முயன்றோம் !

அந்தோ பரிதாபம் !
காலத்தை வென்றவர் யார்தான் உளர்?
நாங்களும் பிரிந்தோம் ! உணரவில்லை அன்று!
மீண்டும் கண்டோம் ! சில வருடங்கள் கடந்து
சிறு நேர சந்திப்புகள் -உயிர் பாதி மீண்டோம் !

தோல்விகள் பலவும் என்னை துரத்திய நேரத்தில்
தோற்கடிக்க நான் முயன்றும் துவண்டிடும் பொழுதுகளில்

தோழமையாய் நின்றெந்தன் மனச்சுமைகள்
போக்கிட்டாள் -என் தோழி!

கேளுங்கள் மக்களே !நான் கூறுவதை கொஞ்சம் !
காணுங்கள்! நட்பெனும் செல்வத்தை வாழ்நாளெல்லாம்
வாழுங்கள்! நிறைவாக ,

வாழ்ந்துறும் பொழுதுகளில்
பகிர்ந்துண்டு வாழ நினை!

வாழ்வியல் தத்துவம் இதை
வழங்கியது நட்பு என்பேன் !

சுற்றிலும் தீமை உன்னை
சுளுகின்ற போதிலும்

அழுக்கிலா நட்பு அது
காத்திடும் இன்றும் என்றும்

இன்னளவும் தொடருகின்றேன்
உள்ளளவும் நட்பெனதை

முடிவிலியாக்க தினம்
முயற்சிகள் தொடர்ந்துகொண்டே ............

ஹைக்கூ-28

Posted on Sunday, December 27, 2009 - 1 comments -




சிவப்பு விளக்கு
எரிந்தும் நிற்கவில்லை
காற்று


*********

ஹைக்கூ (27)

Posted on - 4 comments -




தானே மோதி
தீவைக்கும் தலையில்
தீக்குச்சி



*********

ஹைக்கூ(26)

Posted on - 3 comments -




துகிலுரிந்த துச்சாதனின்
கண்களில் கண்ணீர்
வெங்காயம்



*******

ஹைக்கூ(25)

Posted on Thursday, December 24, 2009 - 4 comments -



மென்மையில்லை
பூக்களைக் கையாண்டும்
பூக்காரியின் விரல்கள்





****

காத்திருப்பேன்....

Posted on Tuesday, December 8, 2009 - 1 comments -



காத்திருப்பேன்
என
கண்ணீருருடன்
கையழுத்திச்
சென்றாய்
என்னைப்
பிரிந்த
நம் கடைசி
சந்திப்பில்!

அப்போது எனக்குத்
தெரியவில்லை
நீ சொன்னது
உன் பெற்றோரின்
சொல்படி
உன் மனம்
மாறும் வரை
தான் என்றும்
உன் திருமணம்
நிச்சயம் ஆகும்
வரை தான்
என்றும்

என்ன செய்ய
சில நேரங்களில்
சில கேள்விகளுக்கும்
பதில்களுக்கும்
அர்த்தங்கள்
வேறாகவே
இருக்கிறது
அது நிகழும்
வரை !
******************

பிரிவு

Posted on - 1 comments -



(தலைப்பு அனுப்பியவர் அஸ்வினி அவர்கள்)
நீ எதற்காக
என்னை
பிரிந்தாய்
பிரிவு காதலை
அதிகமாக்கும்
என்கிறார்களே
அதற்காகவா ?
இல்லை
ஊடலும்
ஒரு வகைக்
காதலே
என்கிறார்களே
அதற்காகவா ?
அல்லது
நான் உனக்காக
எவ்வளவு
வருந்துகிறேன்
என தெரிந்து
கொள்வதற்ககாகவா?
எதுவாக
இருந்தாலும்
பின்பு தெரிந்து
கொள்வோம்

நீ !என்னுடனே
இருந்து விடு.


*************

வால் விண்மீன் !

Posted on Saturday, November 21, 2009 - 4 comments -

(குட்டிப் பாப்பா அமித்துவுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்..24நவம்பர் 2009 )

விழித்ததும்
முகம் கழுவி
விழியோரம்
மையெழுதி
அமாவாசை
நிலவைப் போல
கன்னத்தில்
பொட்டிட்டு
கடைத்தெருவிற்கு
அழைத்துச் சென்று
கைநீட்டும்
பொருள்
கொடுத்து
வீட்டிற்கு
திரும்பி வந்து
விளையாடி
வா என்று
கீழிறக்கி
விட்ட பின்னால்

விளையாடி....
நீ
திரும்புகையில்
பின்னிரவில்
உலா வரும்
வால் விண்மீன்
அதுபோல
வால் நீட்டி
புன்னகைக்கும்
நான் வைத்த
திருஷ்டிப்
பொட்டு!

தந்தை!

Posted on - 2 comments -


சொந்தக்காலில்
நிற்க விரும்பி
சுயமாக
தொழில்கள்
தொடங்கி

தொடர்ந்து
அதில்
தோல்வி
கண்டு
மனைவிக்கு
மகிழ்ச்சி
மறுத்து

தனக்கான
தேவையாவும்
தகடளவு
குறைத்துக்
கொண்டு
பிள்ளைகளை
பள்ளிக்கனுப்பி

தடுமாறி
வாழ்வியக்கி
பிள்ளைகளை
ஆளாக்கி

தளர்ந்திடும் வயது
வந்தும்
தனக்கொரு
வெற்றி வாரா
காரணம்
என்னவென
தேடியும்
கிடைக்காமல்
களைத்திருக்கும்
தகப்பனிடம்

பிள்ளைகள்
கேட்கவென
அடுத்தடுத்து
காத்திருக்கும்

வரிசையாய்
கேள்விகள்
‘என்ன செய்தாய்
நீ எனக்கு ?
ஏனில்லை
சொத்தெனக்கு ?

நாகரீகம் ?

Posted on - 2 comments -




ஸ்டைலென்று
எண்ணி
புகைப்பிடித்துப்
பழகும்

அரைகுறை
ஆடை
அணிந்து
அளவில்லா
பெருமை
கொள்ளும்

விருந்து மற்றும்
விஷேசங்ளில்
மரியாதைக்காய்
மது பருகும்

அழகது
குறையும் என
தாய்மை அதை
தவிர்த்தோடும்

தவிர்க்க இயலா
தாய்மை கண்டால்
தாய்ப்பால் தர
மறுக்கும்

வேலை வேலை
என்றலைந்து
பிள்ளைகளை
காப்பகம்
இடும்

வீண் செலவு
என்றறிந்தும்
வாசலுக்கும்
வாகனம்
கேட்கும்

கூடி விட்ட
எடை குறைக்க
குறுக்கு வழி
மருந்து தேடும்

எதைப் பெற்றோம்
எதையிழந்தோம் என
இறுதியில் மதி குழம்பி

இயன்றவரை
இயல்பைத்
தொலைக்கும்
இன்றைய
மற்றும்
இனிவரும்
நாகரீகம் !

உயிர்த் தோழியின் திருமணம்

Posted on - 2 comments -


விழியசைத்து
நீ விடைபெற்ற
தருணத்தில்
வழிந்தோடும்
உன்னுடைய
விழி நீராலும்
சேர்ந்தோடும்
என்னுடைய
விழி நீராலும்
கர்வப்படும்
நம் நட்பின்
புனிதம்!

நட்பு-ரத்து

Posted on - 4 comments -


இன்று உனது
திருமண நாள்
இதுவே நம் நட்பின்
கடைசி நாளாகவும்
இருக்கலாம்
என்னிடம்
நீ உன்
திருமண
அழைப்பிதழ்
கொடுத்த
நாளிலிருந்து
என்னை
தயார்படுத்திக்
கொள்ள
ஆரம்பித்த நான்
இன்று
முழுவதுமாய்
தயாராகியிருந்தேன்
உணர்ச்சியற்ற
ஜடமாய்

இனி உனக்கான
நட்பு எல்லைகள்
வகுக்கப்படலாம்

என்னுடனான
உன்
மணிநேர
பேச்சுக்கள்
யாவும் நொடி
நேரமாய்
சுருக்கப்படலாம்
அல்லது
இல்லாமலும்
போகலாம்

என் மீது
உன் பார்வைகள்
வீழக் கூட
உன் விழிகளுக்கு
அனுமதிகள்
மறுக்கப்படலாம்.

நடக்கப்போவது
எதுவானாலும்
என்ன செய்ய
முடியும்
என்னால்!
நட்பெனில்
விட்டுக்
கொடுப்பதென்று
என்னை நானே
சமாதானம் செய்து
கொள்வதை தவிர!

தலைமுறைகளின் தலைவிதி

Posted on - 1 comments -


தலைமுறைகள்
பல தாண்டினாலும்
தாமதமாகவே புரிந்து
கொள்ளப்படும்
அன்னையின் பாசமும்
தகப்பனின் தியாகமும்

பொய் ஒன்று சொல்வேன்.....நீ நம்ப வேண்டும்.........

Posted on - 1 comments -


வட நாட்டில்
பிறந்த ரோஜா
ஒன்று உன்
அழகைப் பற்றிய
செய்தியறிந்து
தற்கொலை
செய்து கொண்டதாம்.
அடுத்த பிறவியலேனும்
தமிழ்நாட்டில் பிறந்து
உன் கூந்தல் சேர
வேண்டும் என்ற
கோரிக்கையுடன்.!

என்று தணியும் இந்த வறுமையின் சோகம்

Posted on Saturday, November 14, 2009 - 1 comments -

தொடர்வண்டி
பயணங்களின்
வழி நெடுகில்
கர்வமேற்றும்
வளரச்சிகள்
யாவையும்
கருணையில்லாமல்
உடைத்தெறியும்
கையேந்தி நின்று
கெஞ்சும்
சின்னஞ்சிறு
சிறுமியின்
சின்னஞ்சிறு
பார்வை !

கண்ணிமைக்காமல்

Posted on - 1 comments -

அவள் ஆசையுடன் சமைத்ததை
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!

சக பிரயாணி ! ஆயினும் ............

Posted on Tuesday, November 3, 2009 - 1 comments -



மற்ற சராசரி பயணிகளைப்
போல அல்ல நீ !
அறிமுகத்திலேயெ சட்டென்று
நட்புக்கரம் நீட்டினாய்!
நட்பு எப்பொழுதும்
சுலபமானதாகவே இருக்கிறது
உனக்கு கை
வந்ததைப் போல!
ஏனோ சிலருக்கு அது
மிகவும் தொலைவாகவே
இருக்கிறது
அருகில் அமர்ந்தாலும்!
கரைத்தாய் நீ!
என் பயணத்தின்
சில மணித்துளிகளை
உன் உரையாடலாலும்,
மீதி மணித்துளிகளை
உன்னைப் பற்றிய கணிப்புகளாலும் !
நம்முடைய பயணம் முடிந்து
பல நாட்கள் கழிந்த பின்னும்
என்னுடனான உன் நட்பைத்
தொடர்கிறாய் இன்று வரை
அன்றைய என் எல்லா
கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி !
என்னுடைய இன்றைய
பயணங்களின் போது நினைவிலும்
நேரில் சந்திக்கும்போது
நிஜத்திலும்
பிரியத்துடனே
தரிசனம் தருகிறாய்
பெயருக்கு ஏற்றார் போல்!

ஹைக்கூ

Posted on Sunday, May 17, 2009 - 1 comments -

மாமியாரும் மருமகளும்
பக்கம் பக்கம் உட்கார்ந்தபின்
ஆரம்பமானது சண்டை
தொலைக்காட்சி தொடரில் !

அப்பா

Posted on Monday, May 4, 2009 - 2 comments -

நான்காண்டுகளுக்குப் பின்
ஊர் திரும்புகிறேன்
கைநிறைய சம்பாதித்துக் கொண்டு !
உறவினர் சந்திப்பு
கொண்டு வந்த பொருட்களை
பகிர்ந்தளித்தேன் !
திருப்தியும் அதிருப்தியும்
மாறி மாறி விடைகளாய் !
சிலருக்கு பொருட்களாலும்
சிலருக்கு வார்த்தைகளாலும்
சமாதானம் !
அனைவரையும் அனுப்பிய பின்
மனைவியின் பக்கம் திரும்பினேன் !
விழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய !
அவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்
முகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் !
என் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்
எங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் !
என் மனைவி "அப்பாடீ ! அப்பாகிட்ட போடீ!" என்று
என்னையே என் மகளிடம்
அறிமுகம் செய்யும் ஒவ்வொருமுறையும் !

முதல் சந்திப்பு !

Posted on Saturday, May 2, 2009 - 1 comments -

(திருப்பூர் தோழி ஜாக்லின் அமலாவின் வேண்டுகோளுக்காக )அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்
என் இரவைக் கெடுத்தன
நடுநிசி வரை நீண்டன தினமும்
என் தூக்கமில்லா இரவுகள் !
என் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்
என்னையும் என்னைச்சுற்றியும்
அழகுபடுத்த முனைந்தேன் !
என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
உன்னுடன் சேர்த்து எனக்கு
காதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் !
அதே நாள் தான் என் வயதையும்
எனக்குச் சொல்லியது !
வானொலியில் வரும் பாடல்கள்
எனக்காக எழுதப்படுவதாக உணர்ந்ததும்
உலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் !
அன்று நாம் பேசிய வார்த்தைகளும்
பார்த்த பார்வைகளும்
இன்று வரை ஓடிக்கொண்டேயிருக்கிறது
என் நினைவுத்திரையில்
பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
முடிவுறாமல் !

தென்றல் !

Posted on - 1 comments -

(திருப்பூர் தோழி ப்ரீத்தியின் வேண்டுகோளுக்காக )

வழியில் சந்திக்கும்
அனைவரையும் முத்தமிட
அனுமதி
தென்றலுக்கு மட்டும் !

தெரிகிறாய் !

Posted on - 1 comments -

தேவதைகள் ஆயிரம் சாலையில்
யாரையும் கவனிப்பதில்லை நான்
கவனித்தாலும் தெரிகிறாய் நீ
அவர்களின் ஏதோ ஒன்றில் !

என் நிலை!
நீ என்னைப் பார்க்கும்போது
என்னுள் நிகழ்கிறது ஜல்லிகட்டு !
முடிவில்
சாந்தமாய் நான்
உன் பின்னால் !

நாட்குறிப்பு ?

Posted on Thursday, April 30, 2009 - 1 comments -


நீ தினமும் என்ன உடை அணிகிறாய் !
எங்கெங்கெல்லாம் செல்கிறாய் !
யார் யாரெல்லாம் உன் நண்பர்கள் !
யார் யாரெல்லாம் உன் எதிரிகள் !
எந்தெந்த பூக்கள் பிடிக்கும் !
இன்னும் என்னவெல்லாம் உனக்கு பிடிக்கும் என...
உன்னைப் பற்றிய
குறிப்புகளால் நிறைகிறது
என்னுடைய நாட்குறிப்பு !

தோற்றது போ !

Posted on - 1 comments -

வில் போன்ற புருவங்கள்
இருபுறமும் உருளும் கோலி விழிகள்
கண்களை பற்றிக்கொள்ளும் நிறம்
கேட்டுக்கொண்டேயிருக்கச்சொல்லும் குரல்
அத்தனையையும் கவனித்துக்கொண்டிருக்கையில்
சட்டென்று சிரித்தாய் நீ
மொத்தத்தையும் தோற்கடித்தது உன்
கன்னக்குழி !



ஹைக்கூ

Posted on Friday, April 3, 2009 - 1 comments -

பேருந்து ஜன்னலோரம்
அவஸ்தையானது
மழை நாளில்!

என் தோழி !

Posted on Friday, March 13, 2009 - 2 comments -

(கோயமுத்தூர் தோழிக்காக திருமண வாழ்த்துக்களுடன் )
எனக்கொரு தோழி கண்டேன் !
தினத்துக்கும் துணையென !
வாழ்விற்கு அர்த்தம் தேடி அலைபவர் யாவருமே
நட்பொன்று கொண்டிருந்தால் வாழ்வு அது இனிமை !

என் தோழியும் அப்படித்தான்
என் தேடல் வழி வந்தாள்!

நான் தேடாப் பொருளாய் வந்து
என் வாழ்வில் இனிமை தந்தாள் !

நட்பு எனும் மூன்றெழுத்தை
முடிவிலியாக்க முயன்றோம் !

அந்தோ பரிதாபம் !
காலத்தை வென்றவர் யார்தான் உளர்?
நாங்களும் பிரிந்தோம் ! உணரவில்லை அன்று!
மீண்டும் கண்டோம் ! சில வருடங்கள் கடந்து
சிறு நேர சந்திப்புகள் -உயிர் பாதி மீண்டோம் !

தோல்விகள் பலவும் என்னை துரத்திய நேரத்தில்
தோற்கடிக்க நான் முயன்றும் துவண்டிடும் பொழுதுகளில்

தோழமையாய் நின்றெந்தன் மனச்சுமைகள்
போக்கிட்டாள் -என் தோழி!

கேளுங்கள் மக்களே !நான் கூறுவதை கொஞ்சம் !
காணுங்கள்! நட்பெனும் செல்வத்தை வாழ்நாளெல்லாம்
வாழுங்கள்! நிறைவாக ,

வாழ்ந்துறும் பொழுதுகளில்
பகிர்ந்துண்டு வாழ நினை!

வாழ்வியல் தத்துவம் இதை
வழங்கியது நட்பு என்பேன் !

சுற்றிலும் தீமை உன்னை
சுளுகின்ற போதிலும்

அழுக்கிலா நட்பு அது
காத்திடும் இன்றும் என்றும்

இன்னளவும் தொடருகின்றேன்
உள்ளளவும் நட்பெனதை

முடிவிலியாக்க தினம்
முயற்சிகள் தொடர்ந்துகொண்டே ............