Showing posts with label உறவுகள். Show all posts
Showing posts with label உறவுகள். Show all posts

இடைவெளி அற்ற





உனக்கும்
எனக்குமான
இடைவெளி
பல நூறு
மைல்களாக
இருந்தபோதும்


அது
நம் கணினியின்
தட்டச்சுப்
பலகைக்கும்(அ)
(கைப்பேசிக்கும்)
நம்
விரல்களுக்கும்
இடையேயான
இடைவெளியாகவே
இருந்தது


ஆனால்
இன்று
அது

நமது மௌன
யுத்தங்களாலும்

நீ தொடங்குவாய்
என நானும்

நான் தொடங்குவேன்
என நீயும்
எண்ணும்
எண்ணப்
போர்வைகளாலும்


நீளமாகி
கொண்டிருக்கிறது
மறுபடியும்

சில மில்லி
மீட்டர்களிலிருந்து
பல மைல்களாய்


தொடங்குவது
யாரென்ற
பாகுபாடு
இல்லையெனில்

தூரமோ
இடைவெளியோ
அற்றே
இருக்கிறது
உலகம்
எப்போதும்
(உறவுகளைத் தொலைக்கும் யாவருக்குமான கவிதை)
***********

தந்தை!


சொந்தக்காலில்
நிற்க விரும்பி
சுயமாக
தொழில்கள்
தொடங்கி

தொடர்ந்து
அதில்
தோல்வி
கண்டு
மனைவிக்கு
மகிழ்ச்சி
மறுத்து

தனக்கான
தேவையாவும்
தகடளவு
குறைத்துக்
கொண்டு
பிள்ளைகளை
பள்ளிக்கனுப்பி

தடுமாறி
வாழ்வியக்கி
பிள்ளைகளை
ஆளாக்கி

தளர்ந்திடும் வயது
வந்தும்
தனக்கொரு
வெற்றி வாரா
காரணம்
என்னவென
தேடியும்
கிடைக்காமல்
களைத்திருக்கும்
தகப்பனிடம்

பிள்ளைகள்
கேட்கவென
அடுத்தடுத்து
காத்திருக்கும்

வரிசையாய்
கேள்விகள்
‘என்ன செய்தாய்
நீ எனக்கு ?
ஏனில்லை
சொத்தெனக்கு ?

தலைமுறைகளின் தலைவிதி


தலைமுறைகள்
பல தாண்டினாலும்
தாமதமாகவே புரிந்து
கொள்ளப்படும்
அன்னையின் பாசமும்
தகப்பனின் தியாகமும்

கண்ணிமைக்காமல்

அவள் ஆசையுடன் சமைத்ததை
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!

அப்பா

நான்காண்டுகளுக்குப் பின்
ஊர் திரும்புகிறேன்
கைநிறைய சம்பாதித்துக் கொண்டு !
உறவினர் சந்திப்பு
கொண்டு வந்த பொருட்களை
பகிர்ந்தளித்தேன் !
திருப்தியும் அதிருப்தியும்
மாறி மாறி விடைகளாய் !
சிலருக்கு பொருட்களாலும்
சிலருக்கு வார்த்தைகளாலும்
சமாதானம் !
அனைவரையும் அனுப்பிய பின்
மனைவியின் பக்கம் திரும்பினேன் !
விழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய !
அவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்
முகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் !
என் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்
எங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் !
என் மனைவி "அப்பாடீ ! அப்பாகிட்ட போடீ!" என்று
என்னையே என் மகளிடம்
அறிமுகம் செய்யும் ஒவ்வொருமுறையும் !

என் அன்னைக்கு !



உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!

உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !

உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா? என்றே

ஏக்கம் பிறக்கும் தினமும்!

பலரும் பார்க்க,வியக்க மிகச்

சரியாய் வளர்த்தாய் என்னை !

வாழ்க்கை வாளின் கூர்மைகள் பலவும்

உன்னை குத்தி இம்சித்தும்

எள்ளளவும் அவை எனை அணுகாது

வழி தடுத்தாய் நீ !

தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!

உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது

என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.

உன் ஆசைகள் பலவும் எரிந்து மட்கித்தான்

என் ஆசைமலர்கள் மலர்ந்தன என்று

முன்பு அறியவில்லை நான் !

நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்

ஒன்று உண்டென்றால் அது நீதான் !

நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,மாறாக

உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று

எனைக்கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீதானென !

ஆம்! கனி தான் தின்னத் தின்ன

திகட்டாத கனி !



Showing posts with label உறவுகள். Show all posts
Showing posts with label உறவுகள். Show all posts

இடைவெளி அற்ற

Posted on Thursday, February 18, 2010 - 4 comments -





உனக்கும்
எனக்குமான
இடைவெளி
பல நூறு
மைல்களாக
இருந்தபோதும்


அது
நம் கணினியின்
தட்டச்சுப்
பலகைக்கும்(அ)
(கைப்பேசிக்கும்)
நம்
விரல்களுக்கும்
இடையேயான
இடைவெளியாகவே
இருந்தது


ஆனால்
இன்று
அது

நமது மௌன
யுத்தங்களாலும்

நீ தொடங்குவாய்
என நானும்

நான் தொடங்குவேன்
என நீயும்
எண்ணும்
எண்ணப்
போர்வைகளாலும்


நீளமாகி
கொண்டிருக்கிறது
மறுபடியும்

சில மில்லி
மீட்டர்களிலிருந்து
பல மைல்களாய்


தொடங்குவது
யாரென்ற
பாகுபாடு
இல்லையெனில்

தூரமோ
இடைவெளியோ
அற்றே
இருக்கிறது
உலகம்
எப்போதும்
(உறவுகளைத் தொலைக்கும் யாவருக்குமான கவிதை)
***********

தந்தை!

Posted on Saturday, November 21, 2009 - 2 comments -


சொந்தக்காலில்
நிற்க விரும்பி
சுயமாக
தொழில்கள்
தொடங்கி

தொடர்ந்து
அதில்
தோல்வி
கண்டு
மனைவிக்கு
மகிழ்ச்சி
மறுத்து

தனக்கான
தேவையாவும்
தகடளவு
குறைத்துக்
கொண்டு
பிள்ளைகளை
பள்ளிக்கனுப்பி

தடுமாறி
வாழ்வியக்கி
பிள்ளைகளை
ஆளாக்கி

தளர்ந்திடும் வயது
வந்தும்
தனக்கொரு
வெற்றி வாரா
காரணம்
என்னவென
தேடியும்
கிடைக்காமல்
களைத்திருக்கும்
தகப்பனிடம்

பிள்ளைகள்
கேட்கவென
அடுத்தடுத்து
காத்திருக்கும்

வரிசையாய்
கேள்விகள்
‘என்ன செய்தாய்
நீ எனக்கு ?
ஏனில்லை
சொத்தெனக்கு ?

தலைமுறைகளின் தலைவிதி

Posted on - 1 comments -


தலைமுறைகள்
பல தாண்டினாலும்
தாமதமாகவே புரிந்து
கொள்ளப்படும்
அன்னையின் பாசமும்
தகப்பனின் தியாகமும்

கண்ணிமைக்காமல்

Posted on Saturday, November 14, 2009 - 1 comments -

அவள் ஆசையுடன் சமைத்ததை
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!

அப்பா

Posted on Monday, May 4, 2009 - 2 comments -

நான்காண்டுகளுக்குப் பின்
ஊர் திரும்புகிறேன்
கைநிறைய சம்பாதித்துக் கொண்டு !
உறவினர் சந்திப்பு
கொண்டு வந்த பொருட்களை
பகிர்ந்தளித்தேன் !
திருப்தியும் அதிருப்தியும்
மாறி மாறி விடைகளாய் !
சிலருக்கு பொருட்களாலும்
சிலருக்கு வார்த்தைகளாலும்
சமாதானம் !
அனைவரையும் அனுப்பிய பின்
மனைவியின் பக்கம் திரும்பினேன் !
விழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய !
அவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்
முகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் !
என் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்
எங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் !
என் மனைவி "அப்பாடீ ! அப்பாகிட்ட போடீ!" என்று
என்னையே என் மகளிடம்
அறிமுகம் செய்யும் ஒவ்வொருமுறையும் !

என் அன்னைக்கு !

Posted on Friday, October 10, 2008 - 1 comments -



உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!

உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !

உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா? என்றே

ஏக்கம் பிறக்கும் தினமும்!

பலரும் பார்க்க,வியக்க மிகச்

சரியாய் வளர்த்தாய் என்னை !

வாழ்க்கை வாளின் கூர்மைகள் பலவும்

உன்னை குத்தி இம்சித்தும்

எள்ளளவும் அவை எனை அணுகாது

வழி தடுத்தாய் நீ !

தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!

உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது

என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.

உன் ஆசைகள் பலவும் எரிந்து மட்கித்தான்

என் ஆசைமலர்கள் மலர்ந்தன என்று

முன்பு அறியவில்லை நான் !

நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்

ஒன்று உண்டென்றால் அது நீதான் !

நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,மாறாக

உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று

எனைக்கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீதானென !

ஆம்! கனி தான் தின்னத் தின்ன

திகட்டாத கனி !