அட !
அவளுடன் ஓர் தேநீர் தருணம்

சில நாட்கள் பின் ஓர் சந்திப்பில்
தேநீர் அருந்த அழைத்தேன் !
சற்று நடுத்தரமானதுதான்
சட்டென பிடிக்கும் அழகுடன்
இருந்தது அந்த தேநீர் விடுதி!
இரண்டு தேநீர் சொல்லிவிட்டு
இருக்கையில் உட்கார்ந்தோம் !
மெலிதாய் விரல்களில் பிடித்து
அவள் அருந்தும் அழகை ரசித்தேன்
அவள் அறியாத பொழுதுகளில் !
பேசிக்கொண்டேயிருந்தாள் !
பல வார்த்தைகள் காதில் விழவில்லை
ஒரே நேரத்தில் எத்தனையை கவனிப்பது ?
சிறிது நேரத்திற்குப்பின்
அங்கு ஈக்கள் மொய்க்கவில்லை மேஜை மீது
ஆனால் ,
பல கண்கள் மொய்த்திருந்தது எங்கள் மீது !
என் அன்னைக்கு !

உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!
உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !
உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !
எல்லாம் மீண்டும் கிடைக்காதா? என்றே ஏக்கம் பிறக்கும் தினமும்!பலரும் பார்க்க,வியக்க மிகச்
சரியாய் வளர்த்தாய் என்னை !
வாழ்க்கை வாளின் கூர்மைகள் பலவும்
உன்னை குத்தி இம்சித்தும்எள்ளளவும் அவை எனை அணுகாது
வழி தடுத்தாய் நீ !
தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !
அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது
என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.
உன் ஆசைகள் பலவும் எரிந்து மட்கித்தான்
என் ஆசைமலர்கள் மலர்ந்தன என்றுமுன்பு அறியவில்லை நான் !
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்
ஒன்று உண்டென்றால் அது நீதான் !
நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,மாறாக
உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !வளர்ந்தேன் !
உலகிலேயே தித்திப்பான கனி எது என்றுஎனைக்கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீதானென !
ஆம்! கனி தான் தின்னத் தின்ன
திகட்டாத கனி !
நம் நட்பு


நம்முள் முளைத்திருந்தது .
நாம் சொல்லிக்கொள்ளாமலே அது
நம்முள் நிறைந்திருந்தது.
சில நாட்கள் நம்மிடம் அது
கோபங்களாகவும் ,கவலைகளாகவும் ,
கண்ணீராகவும்,மௌனங்களாகவும்,
நிறைந்திருந்தது .
பல நாட்கள் நம்மிடம் அது
சந்தோசங்களாகவும்,அரட்டைகளாகவும்,
ஆனந்த விழிநீராகவும், பகிர்தலாகவும் ,
நிறைந்திருந்தது .
இன்றும் அது நிறைகிறது
இடைவேளிகளால்
இன்னமும் நிறையும் அது ஏதோ ஒரு வடிவில்
இடைவெளி குறைந்தாலும்! அதிகமானாலும்!
திருப்பம்

கண்டது என் நெஞ்சம்
காதல் என உரைத்தது உலகம்
நம்பவில்லை நான்
சென்றேன் மருத்துவனிடம்
சோதனைகள் நிகழ்ந்தபின்
சொன்னான் அவன்
காயம் இல்லையடா ! மடையா !
காணவில்லை இதயம் என்று
கலங்கினேன் நான் !
மெல்ல மீண்டேன் நினைவை
சென்றேன் அவளிடம்
'கொடு என் இதயத்தை' என்றேன் !
மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!
சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !
ஆனால் அது என்னுடையது அல்ல !
வினவினேன் அவளிடம் !மெலிதாய் சிரித்தாள் !
பின் பதிலுரைத்தாள் !
'அது என்னுடையது 'என !
கடலை விற்பனையாளன்

கடலைகளை பிரித்தெடுத்து
குவியலாய்
காகித சுருள்கள் நேர்த்தியான கோபுரமாய்
மணலோடு மரண ஓலமிட வறுக்கின்றான்பசி ஓலமிடும் அவன் வயிற்றின் தேவைக்காக !
வறுக்கும் ஓசையும் தட்டும் சத்தமும் கவன ஈர்ப்பு இசையாக,பதமாய் வறுக்கும் அவனை
பதம் பார்க்கிறது வாழ்க்கை !"கடைசியில் என்னிடம் தான் வருவாய்"
சபிக்கும் மணலை வறுக்கிறான்!மீண்டும்! மீண்டும் !
உண்ணப்படுவதால் தொடர்கிறது இவன் வாழ்க்கை !
ஆம்!இவன் விற்பதை உண்பவர்களால்!
'இரண்டு ரூபாய் அநியாயம் ' என பேரம் பேசுவார்கள்!
இவன் உழைப்பின் மதிப்பறியார்!
'கடலையாய்' ஜோடிகள் !
'அரசியலாய்' பெரிசுகள் !`கிசு கிசுப்பாய் 'மாமிகள் !
'ஆசையாய்'சிறிசுகள் !என அனைவரும் மெள்ள! மெள்ள !
நகர்கிறது அவன் வாழ்க்கை மெல்ல மெல்ல ....ஹைக்கூ கவிதைகள்
இதயத்தில் காயம்
விபச்சாரம் !
********
சொகுசான வாழ்க்கை
வாழ முடியவில்லை
வீட்டுச் சிறை !
********
அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடியவில்லை
அருகில் மனைவி !
********
முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !
*********
புதைத்தான் வளர்ந்தது செடி
புதைத்தான் வளரவில்லை
மனிதன் !
*********
ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது
நிழல் படப் பூ !
*********
பழமாகவில்லை
காயானது
தேங்காய் !
*********
புகைத்ததால் கிடைத்த பணம்
புகையானது
தீபாவளி அன்று !
******
மிகச் சிறிய துவாரத்திலிருந்து
மிகப் பெரிய முட்டை
சோப்புக் குமிழ் !
********
குழந்தைகளுக்கு துணிகள் வேண்டும்
கணவனிடம் சண்டை
கிழிந்த புடவையுடன் !
*********
நிலவிற்கும் கால்கள் உண்டோ
ஆராய்ச்சியில்
காதலன் !
*********
புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது மிக வேகமாய்
காற்று !
*********
இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி
காதல் !
**********
பூச்சி மருந்து
செத்தது
மனிதன் !
**********
நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது
லாரி !
**********
நீ இரத்தமடா
பிழைத்தவனிடம் சொல்கிறான்
இரத்தம் கொடுத்தவன் !
*********
முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !
*********
வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !
**********
சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை
மீன் தொட்டி மீன் !
*****
மின்சாரம் இல்லை
கண்களில் ஒலி
கருணை!
தேடல்
சொன்னார்கள் ஞானிகள் !
தேடினேன்! கிடைத்தாய் நீ!
குழப்பம்
தலை சீவிக் கொள்கிறேன் .
இரவில் அதை நானே கலைத்துக்கொள்கிறேன் .
காரணம்
கடிகாரத்தின்
நொடி முள்
நின்று நின்று
செல்லும்
ஒவ்வொரு
நொடியும்
உன் அழகைப்
பார்த்து வியந்து
ரசித்து கொண்டே !
முட்டைக்கண்ணி
என் வாழ்வின் ஓளி மிக்க நாள்
நீ உன் கண்களை திறந்தாய்
நான் காதல் கற்றேன்.
உன் இதழ்கள் திறந்தாய்
என் இதயம் தொலைத்தேன்.
******
காதல் என்ற வார்த்தையை
எனக்கு அறிமுகம் செய்தாய் .
உன்னைப்பற்றி கவிதை எழுத
வார்த்தைகளை தேட வைத்தாய்
வார்த்தைகளை தேடி அலைகையில்
வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு மெல்ல சிரித்தாய் !
கனவுலகை அறிமுகம் செய்தாய்
கனவுக்குள் விளையாடினாய்
எத்தனையோ உறவுகள் இருந்தாலும்
புது உறவாய் நுழைந்தாய்
வாழ்வாங்கு வாழ்வாய் என்று வையகமே
புகழ்ந்தாலும் உன் ஒற்றை சொல்லுக்காய்
உயிர் நோக காக்க வைத்தாய்
காத்திருக்கிறேன் உனக்காக..............உயிர் உள்ள வரையில்!
************
என்னுடன் நீ பேசவில்லைஎனில்
என் இதயத்தில் எரிமலை .
என்னுடன் பேசிவிட்டாலோ
என் இதயத்தில் அடைமழை .
***********
உன்னை பார்த்தப்பின் கைதேர்ந்த
நடிகனாகிறேன் உன்னைப்பார்க்காததைப் போல!
அட !
Posted on Tuesday, October 21, 2008 - 2 comments - காதல்
அவளுடன் ஓர் தேநீர் தருணம்
Posted on Friday, October 10, 2008 - 1 comments - காதல்

சில நாட்கள் பின் ஓர் சந்திப்பில்
தேநீர் அருந்த அழைத்தேன் !
சற்று நடுத்தரமானதுதான்
சட்டென பிடிக்கும் அழகுடன்
இருந்தது அந்த தேநீர் விடுதி!
இரண்டு தேநீர் சொல்லிவிட்டு
இருக்கையில் உட்கார்ந்தோம் !
மெலிதாய் விரல்களில் பிடித்து
அவள் அருந்தும் அழகை ரசித்தேன்
அவள் அறியாத பொழுதுகளில் !
பேசிக்கொண்டேயிருந்தாள் !
பல வார்த்தைகள் காதில் விழவில்லை
ஒரே நேரத்தில் எத்தனையை கவனிப்பது ?
சிறிது நேரத்திற்குப்பின்
அங்கு ஈக்கள் மொய்க்கவில்லை மேஜை மீது
ஆனால் ,
பல கண்கள் மொய்த்திருந்தது எங்கள் மீது !
என் அன்னைக்கு !
Posted on - 1 comments - உறவுகள்

உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!
உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !
உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !
எல்லாம் மீண்டும் கிடைக்காதா? என்றே ஏக்கம் பிறக்கும் தினமும்!பலரும் பார்க்க,வியக்க மிகச்
சரியாய் வளர்த்தாய் என்னை !
வாழ்க்கை வாளின் கூர்மைகள் பலவும்
உன்னை குத்தி இம்சித்தும்எள்ளளவும் அவை எனை அணுகாது
வழி தடுத்தாய் நீ !
தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !
அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது
என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.
உன் ஆசைகள் பலவும் எரிந்து மட்கித்தான்
என் ஆசைமலர்கள் மலர்ந்தன என்றுமுன்பு அறியவில்லை நான் !
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்
ஒன்று உண்டென்றால் அது நீதான் !
நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,மாறாக
உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !வளர்ந்தேன் !
உலகிலேயே தித்திப்பான கனி எது என்றுஎனைக்கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீதானென !
ஆம்! கனி தான் தின்னத் தின்ன
திகட்டாத கனி !
என்ன செய்வாய் !
Posted on Wednesday, October 8, 2008 - 1 comments - காதல்
நம் நட்பு
Posted on - 1 comments - நட்பு


நம்முள் முளைத்திருந்தது .
நாம் சொல்லிக்கொள்ளாமலே அது
நம்முள் நிறைந்திருந்தது.
சில நாட்கள் நம்மிடம் அது
கோபங்களாகவும் ,கவலைகளாகவும் ,
கண்ணீராகவும்,மௌனங்களாகவும்,
நிறைந்திருந்தது .
பல நாட்கள் நம்மிடம் அது
சந்தோசங்களாகவும்,அரட்டைகளாகவும்,
ஆனந்த விழிநீராகவும், பகிர்தலாகவும் ,
நிறைந்திருந்தது .
இன்றும் அது நிறைகிறது
இடைவேளிகளால்
இன்னமும் நிறையும் அது ஏதோ ஒரு வடிவில்
இடைவெளி குறைந்தாலும்! அதிகமானாலும்!
சந்திக்க ஏன் மறுத்தாய் ?
Posted on Tuesday, October 7, 2008 - 1 comments - காதல்
திருப்பம்
Posted on Friday, July 11, 2008 - 1 comments - காதல்

கண்டது என் நெஞ்சம்
காதல் என உரைத்தது உலகம்
நம்பவில்லை நான்
சென்றேன் மருத்துவனிடம்
சோதனைகள் நிகழ்ந்தபின்
சொன்னான் அவன்
காயம் இல்லையடா ! மடையா !
காணவில்லை இதயம் என்று
கலங்கினேன் நான் !
மெல்ல மீண்டேன் நினைவை
சென்றேன் அவளிடம்
'கொடு என் இதயத்தை' என்றேன் !
மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!
சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !
ஆனால் அது என்னுடையது அல்ல !
வினவினேன் அவளிடம் !மெலிதாய் சிரித்தாள் !
பின் பதிலுரைத்தாள் !
'அது என்னுடையது 'என !
கடலை விற்பனையாளன்
Posted on Thursday, July 3, 2008 - 1 comments - பொது

கடலைகளை பிரித்தெடுத்து
குவியலாய்
காகித சுருள்கள் நேர்த்தியான கோபுரமாய்
மணலோடு மரண ஓலமிட வறுக்கின்றான்பசி ஓலமிடும் அவன் வயிற்றின் தேவைக்காக !
வறுக்கும் ஓசையும் தட்டும் சத்தமும் கவன ஈர்ப்பு இசையாக,பதமாய் வறுக்கும் அவனை
பதம் பார்க்கிறது வாழ்க்கை !"கடைசியில் என்னிடம் தான் வருவாய்"
சபிக்கும் மணலை வறுக்கிறான்!மீண்டும்! மீண்டும் !
உண்ணப்படுவதால் தொடர்கிறது இவன் வாழ்க்கை !
ஆம்!இவன் விற்பதை உண்பவர்களால்!
'இரண்டு ரூபாய் அநியாயம் ' என பேரம் பேசுவார்கள்!
இவன் உழைப்பின் மதிப்பறியார்!
'கடலையாய்' ஜோடிகள் !
'அரசியலாய்' பெரிசுகள் !`கிசு கிசுப்பாய் 'மாமிகள் !
'ஆசையாய்'சிறிசுகள் !என அனைவரும் மெள்ள! மெள்ள !
நகர்கிறது அவன் வாழ்க்கை மெல்ல மெல்ல ....ஹைக்கூ கவிதைகள்
Posted on Wednesday, July 2, 2008 - 1 comments - ஹைக்கூ
இதயத்தில் காயம்
விபச்சாரம் !
********
சொகுசான வாழ்க்கை
வாழ முடியவில்லை
வீட்டுச் சிறை !
********
அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடியவில்லை
அருகில் மனைவி !
********
முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !
*********
புதைத்தான் வளர்ந்தது செடி
புதைத்தான் வளரவில்லை
மனிதன் !
*********
ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது
நிழல் படப் பூ !
*********
பழமாகவில்லை
காயானது
தேங்காய் !
*********
புகைத்ததால் கிடைத்த பணம்
புகையானது
தீபாவளி அன்று !
******
மிகச் சிறிய துவாரத்திலிருந்து
மிகப் பெரிய முட்டை
சோப்புக் குமிழ் !
********
குழந்தைகளுக்கு துணிகள் வேண்டும்
கணவனிடம் சண்டை
கிழிந்த புடவையுடன் !
*********
நிலவிற்கும் கால்கள் உண்டோ
ஆராய்ச்சியில்
காதலன் !
*********
புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது மிக வேகமாய்
காற்று !
*********
இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி
காதல் !
**********
பூச்சி மருந்து
செத்தது
மனிதன் !
**********
நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது
லாரி !
**********
நீ இரத்தமடா
பிழைத்தவனிடம் சொல்கிறான்
இரத்தம் கொடுத்தவன் !
*********
முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !
*********
வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !
**********
சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை
மீன் தொட்டி மீன் !
*****
மின்சாரம் இல்லை
கண்களில் ஒலி
கருணை!
குழப்பம்
Posted on - 1 comments - காதல்
தலை சீவிக் கொள்கிறேன் .
இரவில் அதை நானே கலைத்துக்கொள்கிறேன் .
காரணம்
Posted on - 1 comments - காதல்
கடிகாரத்தின்
நொடி முள்
நின்று நின்று
செல்லும்
ஒவ்வொரு
நொடியும்
உன் அழகைப்
பார்த்து வியந்து
ரசித்து கொண்டே !
முட்டைக்கண்ணி
Posted on - 1 comments - காதல்
என் வாழ்வின் ஓளி மிக்க நாள்
நீ உன் கண்களை திறந்தாய்
நான் காதல் கற்றேன்.
உன் இதழ்கள் திறந்தாய்
என் இதயம் தொலைத்தேன்.
******
காதல் என்ற வார்த்தையை
எனக்கு அறிமுகம் செய்தாய் .
உன்னைப்பற்றி கவிதை எழுத
வார்த்தைகளை தேட வைத்தாய்
வார்த்தைகளை தேடி அலைகையில்
வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு மெல்ல சிரித்தாய் !
கனவுலகை அறிமுகம் செய்தாய்
கனவுக்குள் விளையாடினாய்
எத்தனையோ உறவுகள் இருந்தாலும்
புது உறவாய் நுழைந்தாய்
வாழ்வாங்கு வாழ்வாய் என்று வையகமே
புகழ்ந்தாலும் உன் ஒற்றை சொல்லுக்காய்
உயிர் நோக காக்க வைத்தாய்
காத்திருக்கிறேன் உனக்காக..............உயிர் உள்ள வரையில்!
************
என்னுடன் நீ பேசவில்லைஎனில்
என் இதயத்தில் எரிமலை .
என்னுடன் பேசிவிட்டாலோ
என் இதயத்தில் அடைமழை .
***********
உன்னை பார்த்தப்பின் கைதேர்ந்த
நடிகனாகிறேன் உன்னைப்பார்க்காததைப் போல!