கண்'நீர்'க் காதலன் !




முன்னோர் நாள்
நீ சூடானாய்

நாம்
பிரிந்தோம்

காற்றிலே உனை
தேடித்திரிந்தேன்
போகும்
வழியெங்கும்

சில நாட்கள்
பின்னர்

ஓர் குளிர்பான
அங்காடியில்

குளிர்ந்தமர்ந்தாய்
நீ

உனை
தோலைவிலிருந்து
கண்டுகொண்ட
நான்

அருகில்
வந்தேன்
உனை
அணைக்கவென

அருகில்
வந்தால்

உனக்கும்
எனக்கும்
இடையில்

திரையாய்க்
கண்ணாடி


செய்வதறியாமல்
படர்ந்தேன்
உனைச் சுற்றி

அணைக்கத்தான்
முடியவில்லை
அருகிலேனும்
இருப்போமென

படர்கையில்
ஏனோ


வழிந்தது
கண்ணீர்

எனையறியாமல் !


***************

உன் மௌனம் !


நீ மௌனம்
கொண்டால்


நானும்
மௌனமாகிறேன்

உன் மௌனத்தை
படிப்பதற்கென




*************

தோற்றுவிட்டதோ உன்னிடம் ?


ர் மாலைப்
பொழுதில்
மருதானி
கையிலிட்டு
வந்து

அழகாய்
சிவந்திருப்பதாய்

என்னிடம்
நீ சிவந்தாய்

எதற்கு
உனக்கு
மருதானி
என
கேட்குமுன்னர்
அடிவானம்
சிவந்திருந்தது
உன்னைப்
பார்த்து

எனக்கென்னவோ
அதன் நிறம்
போதவில்லையோ
என்றே
தோன்றியது

**************

இடைவெளி அற்ற





உனக்கும்
எனக்குமான
இடைவெளி
பல நூறு
மைல்களாக
இருந்தபோதும்


அது
நம் கணினியின்
தட்டச்சுப்
பலகைக்கும்(அ)
(கைப்பேசிக்கும்)
நம்
விரல்களுக்கும்
இடையேயான
இடைவெளியாகவே
இருந்தது


ஆனால்
இன்று
அது

நமது மௌன
யுத்தங்களாலும்

நீ தொடங்குவாய்
என நானும்

நான் தொடங்குவேன்
என நீயும்
எண்ணும்
எண்ணப்
போர்வைகளாலும்


நீளமாகி
கொண்டிருக்கிறது
மறுபடியும்

சில மில்லி
மீட்டர்களிலிருந்து
பல மைல்களாய்


தொடங்குவது
யாரென்ற
பாகுபாடு
இல்லையெனில்

தூரமோ
இடைவெளியோ
அற்றே
இருக்கிறது
உலகம்
எப்போதும்
(உறவுகளைத் தொலைக்கும் யாவருக்குமான கவிதை)
***********




திறக்காத
மனங்கள்
எல்லாம்
திறந்து
கொள்ளும்
நாள் இன்று

திறந்து
நீயும்
சொல்லாவிடில்

எதற்குனக்கு
காதல்
என்று

தயக்கத்தை
மென்று

பயத்தைக்
கொன்று

தந்தே
விடு

அவ(ள்)ன்
கையில்

ரோஜா
ஒன்று

****



வெல்லட்டும் உன் காதல் இன்றைய தினமே !


******



(காதலர் தினத்திற்கு
முந்தைய நாள்
மாலையில்)


“காதல் பரிசாய்
உனக்கொன்று
தரப்போகிறேன்”

“என்ன அது ?”

பதிலை
நாளை
சொல்வதாய்
தொடர்பைத்
துண்டித்துக்
கொண்டாய் நீ

மறுமுறை
முயன்றும்
உன்னைத்
தொடர்பு
கொள்ள
முடியாமல்
போனது
என்னால் !



அடடா!
என்ன செய்வேன் !
என் கனவுக்
குதிரையின்
கடிவாளம்
அறுந்துவிட்டதே

இன்று
இரவு
அது
எங்கெல்லாம்
ஓடப்போகிறதோ ?



****************





எனக்கே
என்னிடம்
பிடிக்காத
என்
முன்கோபம்
கூட ரசிக்கிறாய்
நீ

என் அசைவுகள்
அத்தனையும்
படம் பிடித்து
ரசிக்கும்
உன் கண்களாலும்

அது ஒய்வாக
இருக்கும்போது
உன் விரல்களின்
கவிதைகளாலும்

என் காதலை
தூண்டிக்
கொண்டேயிருக்கிறாய்

எனக்கொன்றும்
செய்யத்
தெரிவதில்லை

உன் மீதும்
உன்
கவிதைகள்
மீதும்

பைத்தியம்
கொள்வதைத்
தவிர




***********

கண்'நீர்'க் காதலன் !

Posted on Tuesday, April 20, 2010 - 4 comments -




முன்னோர் நாள்
நீ சூடானாய்

நாம்
பிரிந்தோம்

காற்றிலே உனை
தேடித்திரிந்தேன்
போகும்
வழியெங்கும்

சில நாட்கள்
பின்னர்

ஓர் குளிர்பான
அங்காடியில்

குளிர்ந்தமர்ந்தாய்
நீ

உனை
தோலைவிலிருந்து
கண்டுகொண்ட
நான்

அருகில்
வந்தேன்
உனை
அணைக்கவென

அருகில்
வந்தால்

உனக்கும்
எனக்கும்
இடையில்

திரையாய்க்
கண்ணாடி


செய்வதறியாமல்
படர்ந்தேன்
உனைச் சுற்றி

அணைக்கத்தான்
முடியவில்லை
அருகிலேனும்
இருப்போமென

படர்கையில்
ஏனோ


வழிந்தது
கண்ணீர்

எனையறியாமல் !


***************

உன் மௌனம் !

Posted on Friday, April 16, 2010 - 0 comments -


நீ மௌனம்
கொண்டால்


நானும்
மௌனமாகிறேன்

உன் மௌனத்தை
படிப்பதற்கென




*************

தோற்றுவிட்டதோ உன்னிடம் ?

Posted on Thursday, April 15, 2010 - 0 comments -


ர் மாலைப்
பொழுதில்
மருதானி
கையிலிட்டு
வந்து

அழகாய்
சிவந்திருப்பதாய்

என்னிடம்
நீ சிவந்தாய்

எதற்கு
உனக்கு
மருதானி
என
கேட்குமுன்னர்
அடிவானம்
சிவந்திருந்தது
உன்னைப்
பார்த்து

எனக்கென்னவோ
அதன் நிறம்
போதவில்லையோ
என்றே
தோன்றியது

**************

இடைவெளி அற்ற

Posted on Thursday, February 18, 2010 - 4 comments -





உனக்கும்
எனக்குமான
இடைவெளி
பல நூறு
மைல்களாக
இருந்தபோதும்


அது
நம் கணினியின்
தட்டச்சுப்
பலகைக்கும்(அ)
(கைப்பேசிக்கும்)
நம்
விரல்களுக்கும்
இடையேயான
இடைவெளியாகவே
இருந்தது


ஆனால்
இன்று
அது

நமது மௌன
யுத்தங்களாலும்

நீ தொடங்குவாய்
என நானும்

நான் தொடங்குவேன்
என நீயும்
எண்ணும்
எண்ணப்
போர்வைகளாலும்


நீளமாகி
கொண்டிருக்கிறது
மறுபடியும்

சில மில்லி
மீட்டர்களிலிருந்து
பல மைல்களாய்


தொடங்குவது
யாரென்ற
பாகுபாடு
இல்லையெனில்

தூரமோ
இடைவெளியோ
அற்றே
இருக்கிறது
உலகம்
எப்போதும்
(உறவுகளைத் தொலைக்கும் யாவருக்குமான கவிதை)
***********

காதலர் தின ஸ்பெஷல் கவிதை(3):காதலைத் திறந்துவிடு

Posted on Sunday, February 14, 2010 - 3 comments -




திறக்காத
மனங்கள்
எல்லாம்
திறந்து
கொள்ளும்
நாள் இன்று

திறந்து
நீயும்
சொல்லாவிடில்

எதற்குனக்கு
காதல்
என்று

தயக்கத்தை
மென்று

பயத்தைக்
கொன்று

தந்தே
விடு

அவ(ள்)ன்
கையில்

ரோஜா
ஒன்று

****



வெல்லட்டும் உன் காதல் இன்றைய தினமே !


******


காதலர்தின ஸ்பெஷல் கவிதை(2):காதலர் தினப் பரிசாய்... ...

Posted on - 3 comments -


(காதலர் தினத்திற்கு
முந்தைய நாள்
மாலையில்)


“காதல் பரிசாய்
உனக்கொன்று
தரப்போகிறேன்”

“என்ன அது ?”

பதிலை
நாளை
சொல்வதாய்
தொடர்பைத்
துண்டித்துக்
கொண்டாய் நீ

மறுமுறை
முயன்றும்
உன்னைத்
தொடர்பு
கொள்ள
முடியாமல்
போனது
என்னால் !



அடடா!
என்ன செய்வேன் !
என் கனவுக்
குதிரையின்
கடிவாளம்
அறுந்துவிட்டதே

இன்று
இரவு
அது
எங்கெல்லாம்
ஓடப்போகிறதோ ?



****************

காதலர்தின ஸ்பெஷல் கவிதை(1):எனக்கொன்றும் தெரிவதில்லை

Posted on - 3 comments -





எனக்கே
என்னிடம்
பிடிக்காத
என்
முன்கோபம்
கூட ரசிக்கிறாய்
நீ

என் அசைவுகள்
அத்தனையும்
படம் பிடித்து
ரசிக்கும்
உன் கண்களாலும்

அது ஒய்வாக
இருக்கும்போது
உன் விரல்களின்
கவிதைகளாலும்

என் காதலை
தூண்டிக்
கொண்டேயிருக்கிறாய்

எனக்கொன்றும்
செய்யத்
தெரிவதில்லை

உன் மீதும்
உன்
கவிதைகள்
மீதும்

பைத்தியம்
கொள்வதைத்
தவிர




***********