கண்'நீர்'க் காதலன் !




முன்னோர் நாள்
நீ சூடானாய்

நாம்
பிரிந்தோம்

காற்றிலே உனை
தேடித்திரிந்தேன்
போகும்
வழியெங்கும்

சில நாட்கள்
பின்னர்

ஓர் குளிர்பான
அங்காடியில்

குளிர்ந்தமர்ந்தாய்
நீ

உனை
தோலைவிலிருந்து
கண்டுகொண்ட
நான்

அருகில்
வந்தேன்
உனை
அணைக்கவென

அருகில்
வந்தால்

உனக்கும்
எனக்கும்
இடையில்

திரையாய்க்
கண்ணாடி


செய்வதறியாமல்
படர்ந்தேன்
உனைச் சுற்றி

அணைக்கத்தான்
முடியவில்லை
அருகிலேனும்
இருப்போமென

படர்கையில்
ஏனோ


வழிந்தது
கண்ணீர்

எனையறியாமல் !


***************

உன் மௌனம் !


நீ மௌனம்
கொண்டால்


நானும்
மௌனமாகிறேன்

உன் மௌனத்தை
படிப்பதற்கென




*************

தோற்றுவிட்டதோ உன்னிடம் ?


ர் மாலைப்
பொழுதில்
மருதானி
கையிலிட்டு
வந்து

அழகாய்
சிவந்திருப்பதாய்

என்னிடம்
நீ சிவந்தாய்

எதற்கு
உனக்கு
மருதானி
என
கேட்குமுன்னர்
அடிவானம்
சிவந்திருந்தது
உன்னைப்
பார்த்து

எனக்கென்னவோ
அதன் நிறம்
போதவில்லையோ
என்றே
தோன்றியது

**************

கண்'நீர்'க் காதலன் !

Posted on Tuesday, April 20, 2010 - 4 comments -




முன்னோர் நாள்
நீ சூடானாய்

நாம்
பிரிந்தோம்

காற்றிலே உனை
தேடித்திரிந்தேன்
போகும்
வழியெங்கும்

சில நாட்கள்
பின்னர்

ஓர் குளிர்பான
அங்காடியில்

குளிர்ந்தமர்ந்தாய்
நீ

உனை
தோலைவிலிருந்து
கண்டுகொண்ட
நான்

அருகில்
வந்தேன்
உனை
அணைக்கவென

அருகில்
வந்தால்

உனக்கும்
எனக்கும்
இடையில்

திரையாய்க்
கண்ணாடி


செய்வதறியாமல்
படர்ந்தேன்
உனைச் சுற்றி

அணைக்கத்தான்
முடியவில்லை
அருகிலேனும்
இருப்போமென

படர்கையில்
ஏனோ


வழிந்தது
கண்ணீர்

எனையறியாமல் !


***************

உன் மௌனம் !

Posted on Friday, April 16, 2010 - 0 comments -


நீ மௌனம்
கொண்டால்


நானும்
மௌனமாகிறேன்

உன் மௌனத்தை
படிப்பதற்கென




*************

தோற்றுவிட்டதோ உன்னிடம் ?

Posted on Thursday, April 15, 2010 - 0 comments -


ர் மாலைப்
பொழுதில்
மருதானி
கையிலிட்டு
வந்து

அழகாய்
சிவந்திருப்பதாய்

என்னிடம்
நீ சிவந்தாய்

எதற்கு
உனக்கு
மருதானி
என
கேட்குமுன்னர்
அடிவானம்
சிவந்திருந்தது
உன்னைப்
பார்த்து

எனக்கென்னவோ
அதன் நிறம்
போதவில்லையோ
என்றே
தோன்றியது

**************