திருப்பம்


கண்கள் மோதியதால் காயம்
கண்டது என் நெஞ்சம்
காதல் என உரைத்தது உலகம்
நம்பவில்லை நான்
சென்றேன் மருத்துவனிடம்
சோதனைகள் நிகழ்ந்தபின்
சொன்னான் அவன்
காயம் இல்லையடா ! மடையா !
காணவில்லை இதயம் என்று
கலங்கினேன் நான் !
மெல்ல மீண்டேன் நினைவை
சென்றேன் அவளிடம்
'கொடு என் இதயத்தை' என்றேன் !
மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!
சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !
ஆனால் அது என்னுடையது அல்ல !
வினவினேன் அவளிடம் !மெலிதாய் சிரித்தாள் !
பின் பதிலுரைத்தாள் !
'அது என்னுடையது 'என !

கடலை விற்பனையாளன்


கடலைகளை பிரித்தெடுத்து

குவியலாய்

காகித சுருள்கள் நேர்த்தியான கோபுரமாய்

மணலோடு மரண ஓலமிட வறுக்கின்றான்

பசி ஓலமிடும் அவன் வயிற்றின் தேவைக்காக !

வறுக்கும் ஓசையும் தட்டும் சத்தமும்

கவன ஈர்ப்பு இசையாக,

பதமாய் வறுக்கும் அவனை

பதம் பார்க்கிறது வாழ்க்கை !
"கடைசியில் என்னிடம் தான் வருவாய்"

சபிக்கும் மணலை வறுக்கிறான்!மீண்டும்! மீண்டும் !

உண்ணப்படுவதால் தொடர்கிறது இவன் வாழ்க்கை !

ஆம்!இவன் விற்பதை உண்பவர்களால்!


'இரண்டு ரூபாய் அநியாயம் ' என பேரம் பேசுவார்கள்!

இவன் உழைப்பின் மதிப்பறியார்!

'கடலையாய்' ஜோடிகள் !

'அரசியலாய்' பெரிசுகள் !

`கிசு கிசுப்பாய் 'மாமிகள் !

'ஆசையாய்'சிறிசுகள் !

என அனைவரும் மெள்ள! மெள்ள !

நகர்கிறது அவன் வாழ்க்கை மெல்ல மெல்ல ....

ஹைக்கூ கவிதைகள்

தடுக்கி விழுந்தாள்
இதயத்தில் காயம்
விபச்சாரம் !
********
சொகுசான வாழ்க்கை
வாழ முடியவில்லை
வீட்டுச் சிறை !

********

அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடியவில்லை
அருகில் மனைவி !

********

முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !

*********

புதைத்தான் வளர்ந்தது செடி
புதைத்தான் வளரவில்லை
மனிதன் !

*********

ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது
நிழல் படப் பூ !

*********
பழமாகவில்லை
காயானது
தேங்காய் !

*********
புகைத்ததால் கிடைத்த பணம்
புகையானது
தீபாவளி அன்று !

******

மிகச் சிறிய துவாரத்திலிருந்து
மிகப் பெரிய முட்டை
சோப்புக் குமிழ் !

********
குழந்தைகளுக்கு துணிகள் வேண்டும்
கணவனிடம் சண்டை
கிழிந்த புடவையுடன் !
*********
நிலவிற்கும் கால்கள் உண்டோ
ஆராய்ச்சியில்
காதலன் !
*********
புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது மிக வேகமாய்
காற்று !
*********
இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி
காதல் !
**********
பூச்சி மருந்து
செத்தது
மனிதன் !
**********
நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது
லாரி !
**********

நீ இரத்தமடா
பிழைத்தவனிடம் சொல்கிறான்
இரத்தம் கொடுத்தவன் !

*********

முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !

*********

வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !

**********

சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை
மீன் தொட்டி மீன் !

*****

மின்சாரம் இல்லை
கண்களில் ஒலி
கருணை!

திருப்பம்

Posted on Friday, July 11, 2008 - 1 comments -


கண்கள் மோதியதால் காயம்
கண்டது என் நெஞ்சம்
காதல் என உரைத்தது உலகம்
நம்பவில்லை நான்
சென்றேன் மருத்துவனிடம்
சோதனைகள் நிகழ்ந்தபின்
சொன்னான் அவன்
காயம் இல்லையடா ! மடையா !
காணவில்லை இதயம் என்று
கலங்கினேன் நான் !
மெல்ல மீண்டேன் நினைவை
சென்றேன் அவளிடம்
'கொடு என் இதயத்தை' என்றேன் !
மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!
சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !
ஆனால் அது என்னுடையது அல்ல !
வினவினேன் அவளிடம் !மெலிதாய் சிரித்தாள் !
பின் பதிலுரைத்தாள் !
'அது என்னுடையது 'என !

கடலை விற்பனையாளன்

Posted on Thursday, July 3, 2008 - 1 comments -


கடலைகளை பிரித்தெடுத்து

குவியலாய்

காகித சுருள்கள் நேர்த்தியான கோபுரமாய்

மணலோடு மரண ஓலமிட வறுக்கின்றான்

பசி ஓலமிடும் அவன் வயிற்றின் தேவைக்காக !

வறுக்கும் ஓசையும் தட்டும் சத்தமும்

கவன ஈர்ப்பு இசையாக,

பதமாய் வறுக்கும் அவனை

பதம் பார்க்கிறது வாழ்க்கை !
"கடைசியில் என்னிடம் தான் வருவாய்"

சபிக்கும் மணலை வறுக்கிறான்!மீண்டும்! மீண்டும் !

உண்ணப்படுவதால் தொடர்கிறது இவன் வாழ்க்கை !

ஆம்!இவன் விற்பதை உண்பவர்களால்!


'இரண்டு ரூபாய் அநியாயம் ' என பேரம் பேசுவார்கள்!

இவன் உழைப்பின் மதிப்பறியார்!

'கடலையாய்' ஜோடிகள் !

'அரசியலாய்' பெரிசுகள் !

`கிசு கிசுப்பாய் 'மாமிகள் !

'ஆசையாய்'சிறிசுகள் !

என அனைவரும் மெள்ள! மெள்ள !

நகர்கிறது அவன் வாழ்க்கை மெல்ல மெல்ல ....

ஹைக்கூ கவிதைகள்

Posted on Wednesday, July 2, 2008 - 1 comments -

தடுக்கி விழுந்தாள்
இதயத்தில் காயம்
விபச்சாரம் !
********
சொகுசான வாழ்க்கை
வாழ முடியவில்லை
வீட்டுச் சிறை !

********

அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடியவில்லை
அருகில் மனைவி !

********

முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !

*********

புதைத்தான் வளர்ந்தது செடி
புதைத்தான் வளரவில்லை
மனிதன் !

*********

ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது
நிழல் படப் பூ !

*********
பழமாகவில்லை
காயானது
தேங்காய் !

*********
புகைத்ததால் கிடைத்த பணம்
புகையானது
தீபாவளி அன்று !

******

மிகச் சிறிய துவாரத்திலிருந்து
மிகப் பெரிய முட்டை
சோப்புக் குமிழ் !

********
குழந்தைகளுக்கு துணிகள் வேண்டும்
கணவனிடம் சண்டை
கிழிந்த புடவையுடன் !
*********
நிலவிற்கும் கால்கள் உண்டோ
ஆராய்ச்சியில்
காதலன் !
*********
புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது மிக வேகமாய்
காற்று !
*********
இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி
காதல் !
**********
பூச்சி மருந்து
செத்தது
மனிதன் !
**********
நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது
லாரி !
**********

நீ இரத்தமடா
பிழைத்தவனிடம் சொல்கிறான்
இரத்தம் கொடுத்தவன் !

*********

முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !

*********

வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !

**********

சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை
மீன் தொட்டி மீன் !

*****

மின்சாரம் இல்லை
கண்களில் ஒலி
கருணை!