வால் விண்மீன் !

(குட்டிப் பாப்பா அமித்துவுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்..24நவம்பர் 2009 )

விழித்ததும்
முகம் கழுவி
விழியோரம்
மையெழுதி
அமாவாசை
நிலவைப் போல
கன்னத்தில்
பொட்டிட்டு
கடைத்தெருவிற்கு
அழைத்துச் சென்று
கைநீட்டும்
பொருள்
கொடுத்து
வீட்டிற்கு
திரும்பி வந்து
விளையாடி
வா என்று
கீழிறக்கி
விட்ட பின்னால்

விளையாடி....
நீ
திரும்புகையில்
பின்னிரவில்
உலா வரும்
வால் விண்மீன்
அதுபோல
வால் நீட்டி
புன்னகைக்கும்
நான் வைத்த
திருஷ்டிப்
பொட்டு!

தந்தை!


சொந்தக்காலில்
நிற்க விரும்பி
சுயமாக
தொழில்கள்
தொடங்கி

தொடர்ந்து
அதில்
தோல்வி
கண்டு
மனைவிக்கு
மகிழ்ச்சி
மறுத்து

தனக்கான
தேவையாவும்
தகடளவு
குறைத்துக்
கொண்டு
பிள்ளைகளை
பள்ளிக்கனுப்பி

தடுமாறி
வாழ்வியக்கி
பிள்ளைகளை
ஆளாக்கி

தளர்ந்திடும் வயது
வந்தும்
தனக்கொரு
வெற்றி வாரா
காரணம்
என்னவென
தேடியும்
கிடைக்காமல்
களைத்திருக்கும்
தகப்பனிடம்

பிள்ளைகள்
கேட்கவென
அடுத்தடுத்து
காத்திருக்கும்

வரிசையாய்
கேள்விகள்
‘என்ன செய்தாய்
நீ எனக்கு ?
ஏனில்லை
சொத்தெனக்கு ?

நாகரீகம் ?




ஸ்டைலென்று
எண்ணி
புகைப்பிடித்துப்
பழகும்

அரைகுறை
ஆடை
அணிந்து
அளவில்லா
பெருமை
கொள்ளும்

விருந்து மற்றும்
விஷேசங்ளில்
மரியாதைக்காய்
மது பருகும்

அழகது
குறையும் என
தாய்மை அதை
தவிர்த்தோடும்

தவிர்க்க இயலா
தாய்மை கண்டால்
தாய்ப்பால் தர
மறுக்கும்

வேலை வேலை
என்றலைந்து
பிள்ளைகளை
காப்பகம்
இடும்

வீண் செலவு
என்றறிந்தும்
வாசலுக்கும்
வாகனம்
கேட்கும்

கூடி விட்ட
எடை குறைக்க
குறுக்கு வழி
மருந்து தேடும்

எதைப் பெற்றோம்
எதையிழந்தோம் என
இறுதியில் மதி குழம்பி

இயன்றவரை
இயல்பைத்
தொலைக்கும்
இன்றைய
மற்றும்
இனிவரும்
நாகரீகம் !

உயிர்த் தோழியின் திருமணம்


விழியசைத்து
நீ விடைபெற்ற
தருணத்தில்
வழிந்தோடும்
உன்னுடைய
விழி நீராலும்
சேர்ந்தோடும்
என்னுடைய
விழி நீராலும்
கர்வப்படும்
நம் நட்பின்
புனிதம்!

நட்பு-ரத்து


இன்று உனது
திருமண நாள்
இதுவே நம் நட்பின்
கடைசி நாளாகவும்
இருக்கலாம்
என்னிடம்
நீ உன்
திருமண
அழைப்பிதழ்
கொடுத்த
நாளிலிருந்து
என்னை
தயார்படுத்திக்
கொள்ள
ஆரம்பித்த நான்
இன்று
முழுவதுமாய்
தயாராகியிருந்தேன்
உணர்ச்சியற்ற
ஜடமாய்

இனி உனக்கான
நட்பு எல்லைகள்
வகுக்கப்படலாம்

என்னுடனான
உன்
மணிநேர
பேச்சுக்கள்
யாவும் நொடி
நேரமாய்
சுருக்கப்படலாம்
அல்லது
இல்லாமலும்
போகலாம்

என் மீது
உன் பார்வைகள்
வீழக் கூட
உன் விழிகளுக்கு
அனுமதிகள்
மறுக்கப்படலாம்.

நடக்கப்போவது
எதுவானாலும்
என்ன செய்ய
முடியும்
என்னால்!
நட்பெனில்
விட்டுக்
கொடுப்பதென்று
என்னை நானே
சமாதானம் செய்து
கொள்வதை தவிர!

தலைமுறைகளின் தலைவிதி


தலைமுறைகள்
பல தாண்டினாலும்
தாமதமாகவே புரிந்து
கொள்ளப்படும்
அன்னையின் பாசமும்
தகப்பனின் தியாகமும்


வட நாட்டில்
பிறந்த ரோஜா
ஒன்று உன்
அழகைப் பற்றிய
செய்தியறிந்து
தற்கொலை
செய்து கொண்டதாம்.
அடுத்த பிறவியலேனும்
தமிழ்நாட்டில் பிறந்து
உன் கூந்தல் சேர
வேண்டும் என்ற
கோரிக்கையுடன்.!

என்று தணியும் இந்த வறுமையின் சோகம்

தொடர்வண்டி
பயணங்களின்
வழி நெடுகில்
கர்வமேற்றும்
வளரச்சிகள்
யாவையும்
கருணையில்லாமல்
உடைத்தெறியும்
கையேந்தி நின்று
கெஞ்சும்
சின்னஞ்சிறு
சிறுமியின்
சின்னஞ்சிறு
பார்வை !

கண்ணிமைக்காமல்

அவள் ஆசையுடன் சமைத்ததை
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!

சக பிரயாணி ! ஆயினும் ............



மற்ற சராசரி பயணிகளைப்
போல அல்ல நீ !
அறிமுகத்திலேயெ சட்டென்று
நட்புக்கரம் நீட்டினாய்!
நட்பு எப்பொழுதும்
சுலபமானதாகவே இருக்கிறது
உனக்கு கை
வந்ததைப் போல!
ஏனோ சிலருக்கு அது
மிகவும் தொலைவாகவே
இருக்கிறது
அருகில் அமர்ந்தாலும்!
கரைத்தாய் நீ!
என் பயணத்தின்
சில மணித்துளிகளை
உன் உரையாடலாலும்,
மீதி மணித்துளிகளை
உன்னைப் பற்றிய கணிப்புகளாலும் !
நம்முடைய பயணம் முடிந்து
பல நாட்கள் கழிந்த பின்னும்
என்னுடனான உன் நட்பைத்
தொடர்கிறாய் இன்று வரை
அன்றைய என் எல்லா
கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி !
என்னுடைய இன்றைய
பயணங்களின் போது நினைவிலும்
நேரில் சந்திக்கும்போது
நிஜத்திலும்
பிரியத்துடனே
தரிசனம் தருகிறாய்
பெயருக்கு ஏற்றார் போல்!

வால் விண்மீன் !

Posted on Saturday, November 21, 2009 - 4 comments -

(குட்டிப் பாப்பா அமித்துவுக்காக பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்..24நவம்பர் 2009 )

விழித்ததும்
முகம் கழுவி
விழியோரம்
மையெழுதி
அமாவாசை
நிலவைப் போல
கன்னத்தில்
பொட்டிட்டு
கடைத்தெருவிற்கு
அழைத்துச் சென்று
கைநீட்டும்
பொருள்
கொடுத்து
வீட்டிற்கு
திரும்பி வந்து
விளையாடி
வா என்று
கீழிறக்கி
விட்ட பின்னால்

விளையாடி....
நீ
திரும்புகையில்
பின்னிரவில்
உலா வரும்
வால் விண்மீன்
அதுபோல
வால் நீட்டி
புன்னகைக்கும்
நான் வைத்த
திருஷ்டிப்
பொட்டு!

தந்தை!

Posted on - 2 comments -


சொந்தக்காலில்
நிற்க விரும்பி
சுயமாக
தொழில்கள்
தொடங்கி

தொடர்ந்து
அதில்
தோல்வி
கண்டு
மனைவிக்கு
மகிழ்ச்சி
மறுத்து

தனக்கான
தேவையாவும்
தகடளவு
குறைத்துக்
கொண்டு
பிள்ளைகளை
பள்ளிக்கனுப்பி

தடுமாறி
வாழ்வியக்கி
பிள்ளைகளை
ஆளாக்கி

தளர்ந்திடும் வயது
வந்தும்
தனக்கொரு
வெற்றி வாரா
காரணம்
என்னவென
தேடியும்
கிடைக்காமல்
களைத்திருக்கும்
தகப்பனிடம்

பிள்ளைகள்
கேட்கவென
அடுத்தடுத்து
காத்திருக்கும்

வரிசையாய்
கேள்விகள்
‘என்ன செய்தாய்
நீ எனக்கு ?
ஏனில்லை
சொத்தெனக்கு ?

நாகரீகம் ?

Posted on - 2 comments -




ஸ்டைலென்று
எண்ணி
புகைப்பிடித்துப்
பழகும்

அரைகுறை
ஆடை
அணிந்து
அளவில்லா
பெருமை
கொள்ளும்

விருந்து மற்றும்
விஷேசங்ளில்
மரியாதைக்காய்
மது பருகும்

அழகது
குறையும் என
தாய்மை அதை
தவிர்த்தோடும்

தவிர்க்க இயலா
தாய்மை கண்டால்
தாய்ப்பால் தர
மறுக்கும்

வேலை வேலை
என்றலைந்து
பிள்ளைகளை
காப்பகம்
இடும்

வீண் செலவு
என்றறிந்தும்
வாசலுக்கும்
வாகனம்
கேட்கும்

கூடி விட்ட
எடை குறைக்க
குறுக்கு வழி
மருந்து தேடும்

எதைப் பெற்றோம்
எதையிழந்தோம் என
இறுதியில் மதி குழம்பி

இயன்றவரை
இயல்பைத்
தொலைக்கும்
இன்றைய
மற்றும்
இனிவரும்
நாகரீகம் !

உயிர்த் தோழியின் திருமணம்

Posted on - 2 comments -


விழியசைத்து
நீ விடைபெற்ற
தருணத்தில்
வழிந்தோடும்
உன்னுடைய
விழி நீராலும்
சேர்ந்தோடும்
என்னுடைய
விழி நீராலும்
கர்வப்படும்
நம் நட்பின்
புனிதம்!

நட்பு-ரத்து

Posted on - 4 comments -


இன்று உனது
திருமண நாள்
இதுவே நம் நட்பின்
கடைசி நாளாகவும்
இருக்கலாம்
என்னிடம்
நீ உன்
திருமண
அழைப்பிதழ்
கொடுத்த
நாளிலிருந்து
என்னை
தயார்படுத்திக்
கொள்ள
ஆரம்பித்த நான்
இன்று
முழுவதுமாய்
தயாராகியிருந்தேன்
உணர்ச்சியற்ற
ஜடமாய்

இனி உனக்கான
நட்பு எல்லைகள்
வகுக்கப்படலாம்

என்னுடனான
உன்
மணிநேர
பேச்சுக்கள்
யாவும் நொடி
நேரமாய்
சுருக்கப்படலாம்
அல்லது
இல்லாமலும்
போகலாம்

என் மீது
உன் பார்வைகள்
வீழக் கூட
உன் விழிகளுக்கு
அனுமதிகள்
மறுக்கப்படலாம்.

நடக்கப்போவது
எதுவானாலும்
என்ன செய்ய
முடியும்
என்னால்!
நட்பெனில்
விட்டுக்
கொடுப்பதென்று
என்னை நானே
சமாதானம் செய்து
கொள்வதை தவிர!

தலைமுறைகளின் தலைவிதி

Posted on - 1 comments -


தலைமுறைகள்
பல தாண்டினாலும்
தாமதமாகவே புரிந்து
கொள்ளப்படும்
அன்னையின் பாசமும்
தகப்பனின் தியாகமும்

பொய் ஒன்று சொல்வேன்.....நீ நம்ப வேண்டும்.........

Posted on - 1 comments -


வட நாட்டில்
பிறந்த ரோஜா
ஒன்று உன்
அழகைப் பற்றிய
செய்தியறிந்து
தற்கொலை
செய்து கொண்டதாம்.
அடுத்த பிறவியலேனும்
தமிழ்நாட்டில் பிறந்து
உன் கூந்தல் சேர
வேண்டும் என்ற
கோரிக்கையுடன்.!

என்று தணியும் இந்த வறுமையின் சோகம்

Posted on Saturday, November 14, 2009 - 1 comments -

தொடர்வண்டி
பயணங்களின்
வழி நெடுகில்
கர்வமேற்றும்
வளரச்சிகள்
யாவையும்
கருணையில்லாமல்
உடைத்தெறியும்
கையேந்தி நின்று
கெஞ்சும்
சின்னஞ்சிறு
சிறுமியின்
சின்னஞ்சிறு
பார்வை !

கண்ணிமைக்காமல்

Posted on - 1 comments -

அவள் ஆசையுடன் சமைத்ததை
அமர்ந்து உண்ணாமல்
அதிலும் ஓர் குறை தேடி
திட்டிச் செல்லும் அவனையும்,
அவன் போன பின்
அழுது நோகும் அவளையும்
கண்ணிமைக்காமல் பார்த்திருக்கும்
கண்ணாடிப் பெட்டி
கரடி பொம்மை!

சக பிரயாணி ! ஆயினும் ............

Posted on Tuesday, November 3, 2009 - 1 comments -



மற்ற சராசரி பயணிகளைப்
போல அல்ல நீ !
அறிமுகத்திலேயெ சட்டென்று
நட்புக்கரம் நீட்டினாய்!
நட்பு எப்பொழுதும்
சுலபமானதாகவே இருக்கிறது
உனக்கு கை
வந்ததைப் போல!
ஏனோ சிலருக்கு அது
மிகவும் தொலைவாகவே
இருக்கிறது
அருகில் அமர்ந்தாலும்!
கரைத்தாய் நீ!
என் பயணத்தின்
சில மணித்துளிகளை
உன் உரையாடலாலும்,
மீதி மணித்துளிகளை
உன்னைப் பற்றிய கணிப்புகளாலும் !
நம்முடைய பயணம் முடிந்து
பல நாட்கள் கழிந்த பின்னும்
என்னுடனான உன் நட்பைத்
தொடர்கிறாய் இன்று வரை
அன்றைய என் எல்லா
கணிப்புகளையும் தவிடு பொடியாக்கி !
என்னுடைய இன்றைய
பயணங்களின் போது நினைவிலும்
நேரில் சந்திக்கும்போது
நிஜத்திலும்
பிரியத்துடனே
தரிசனம் தருகிறாய்
பெயருக்கு ஏற்றார் போல்!