என் அன்னைக்கு !



உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!

உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !

உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா? என்றே

ஏக்கம் பிறக்கும் தினமும்!

பலரும் பார்க்க,வியக்க மிகச்

சரியாய் வளர்த்தாய் என்னை !

வாழ்க்கை வாளின் கூர்மைகள் பலவும்

உன்னை குத்தி இம்சித்தும்

எள்ளளவும் அவை எனை அணுகாது

வழி தடுத்தாய் நீ !

தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!

உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது

என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.

உன் ஆசைகள் பலவும் எரிந்து மட்கித்தான்

என் ஆசைமலர்கள் மலர்ந்தன என்று

முன்பு அறியவில்லை நான் !

நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்

ஒன்று உண்டென்றால் அது நீதான் !

நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,மாறாக

உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று

எனைக்கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீதானென !

ஆம்! கனி தான் தின்னத் தின்ன

திகட்டாத கனி !



1 comments:

cheena (சீனா) said...

தின்னத் தின்ன திகட்டாத கனி பெற்ற தாய்தான் - உண்மை

நல்வாழ்த்துகள் காதல் கவி

என் அன்னைக்கு !

Posted on Friday, October 10, 2008 - 1 comments -



உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!

உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !

உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா? என்றே

ஏக்கம் பிறக்கும் தினமும்!

பலரும் பார்க்க,வியக்க மிகச்

சரியாய் வளர்த்தாய் என்னை !

வாழ்க்கை வாளின் கூர்மைகள் பலவும்

உன்னை குத்தி இம்சித்தும்

எள்ளளவும் அவை எனை அணுகாது

வழி தடுத்தாய் நீ !

தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!

உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது

என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.

உன் ஆசைகள் பலவும் எரிந்து மட்கித்தான்

என் ஆசைமலர்கள் மலர்ந்தன என்று

முன்பு அறியவில்லை நான் !

நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்

ஒன்று உண்டென்றால் அது நீதான் !

நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,மாறாக

உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று

எனைக்கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீதானென !

ஆம்! கனி தான் தின்னத் தின்ன

திகட்டாத கனி !



There has been 1 Responses to “என் அன்னைக்கு !”

  1. cheena (சீனா) says:

    தின்னத் தின்ன திகட்டாத கனி பெற்ற தாய்தான் - உண்மை

    நல்வாழ்த்துகள் காதல் கவி